புரோ கபடி லீக்; ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - தபாங் டெல்லி இடையிலான ஆட்டம் டிரா..!


புரோ கபடி லீக்; ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - தபாங் டெல்லி இடையிலான ஆட்டம் டிரா..!
x

Image Courtesy: @ProKabaddi

இன்று நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.

சென்னை,

10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த 2-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.

இந்நிலையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - தபாங் டெல்லி அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளை குவித்தன.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் இறுதியில் 32-32 என்ற புள்ளி கணக்கில் டிராவில் முடிந்தது. இதையடுத்து இன்று நடைபெற்று வரும் மற்றொரு ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.


Next Story