உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய வீராங்கனை வெண்கலம் வென்றார்


உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய வீராங்கனை வெண்கலம் வென்றார்
x

Image : SAI Media

தினத்தந்தி 19 Aug 2023 3:59 PM GMT (Updated: 19 Aug 2023 4:00 PM GMT)

பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை மெஹீலி கோஷ் வெண்கலப்பதக்கம் வென்றார்

.பாகு,

உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடந்து வருகிறது.இதில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இன்று நடந்த போட்டியில் இந்திய வீராங்கனை மெஹீலி கோஷ் வெண்கலப்பதக்கம் வென்றார்.

இதனால் இந்திய வீராங்கனை மெஹீலி கோஷ் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதுவரை பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியாவை சேர்ந்த 4 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது குறித்து மெஹீலி கோஷ் கூறியதாவது ,

நான் மிகவும் உற்சாகமாக உணர்கிறேன். இந்தியாவுக்காக வெண்கலப் பதக்கத்தையும்,பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றதையும் பெருமையாக கருதுகிறேன் என தெரிவித்தார்.


Next Story