கல்லூரி அணிகளுக்கான மாநில விளையாட்டு போட்டிகள் சென்னையில் இன்று தொடக்கம்


கல்லூரி அணிகளுக்கான மாநில விளையாட்டு போட்டிகள் சென்னையில் இன்று தொடக்கம்
x

கல்லூரி அணிகளுக்கான மாநில விளையாட்டு போட்டிகள் சென்னையில் இன்று தொடங்குகிறது.

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்.ஓ.பி.வைஷ்ணவா பெண்கள் கல்லூரி சார்பில் பெண்கள் கல்லூரி அணிகளுக்கான விளையாட்டு போட்டிகள் (வாஸ்போ) இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி மைதானத்தில் நடக்கிறது.

இதில் பேட்மிண்டன், பால் பேட்மிண்டன், செஸ், டேபிள் டென்னிஸ், கூடைப்பந்து, கைப்பந்து ஆகிய 6 போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் எஸ்.ஆர்.எம், செயின்ட் ஜோசப்ஸ், ஸ்டெல்லா மேரிஸ், எத்திராஜ், ராணிமேரி உள்பட 26 கல்லூரிகளை சேர்ந்த 450-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பதக்கம் மற்றும் ரூ.1.12 லட்சம் ரொக்கப்பரிசாகவும் வழங்கப்படுகிறது.


Next Story