மாற்றுத்திறனாளிகளுக்கான நீச்சல் போட்டி: இந்திய வீரர் புதிய சாதனை


மாற்றுத்திறனாளிகளுக்கான நீச்சல் போட்டி: இந்திய வீரர் புதிய சாதனை
x

image tweeted by @biharfoundation

மாற்றுத் திறனாளிகளுக்கான உலக பாரா நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி போர்ச்சுகல் நாட்டில் நடந்து வருகிறது.

போர்ச்சுக்கல்,

மாற்றுத் திறனாளிகளுக்கான உலக பாரா நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி போர்ச்சுகல் நாட்டில் நடந்து வருகிறது.

இதில் ஆண்களுக்கான 200 மீட்டர் தனிநபர் மெட்லே பந்தயத்தின் தகுதி சுற்றில் இந்திய வீரர் முகமது ஷம்ஸ் ஆலம் ஷேக் 4 நிமிடம் 39.71 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய தேசிய சாதனை படைத்ததுடன், 6-வது இடம் பிடித்தார்.

இதற்கு முன்பு முகமது ஷம்ஸ் ஆலம் 4 நிமிடம் 43.39 வினாடியில் பந்தய தூரத்தை கடந்ததே தேசிய சாதனையாக இருந்தது. தற்போது தனது முந்தைய சாதனையை தகர்த்துள்ளார்.


Next Story