தேசிய கைப்பந்து போட்டியில் பங்கேற்கும் தமிழக அணி - நாளை மறுதினம் தேர்வு


தேசிய கைப்பந்து போட்டியில் பங்கேற்கும் தமிழக அணி - நாளை மறுதினம் தேர்வு
x

தகுதி போட்டி குறித்த தகவலை தமிழ்நாடு மாநில கைப்பந்து சங்கத்தின் இடைக்கால கமிட்டி வெளியிட்டுள்ளது.

சென்னை,

71-வது சீனியர் தேசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 2-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை நடக்கிறது. இந்நிலையில் தமிழக அணிக்கான வீரர், வீராங்கணைகள் தேர்வு குறித்த தகவலை தமிழ்நாடு மாநில கைப்பந்து சங்கத்தின் இடைக்கால கமிட்டி வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்த போட்டியில் பங்கேற்கும் தமிழக ஆண்கள் மற்றும் பெண்கள் அணியை தேர்வு செய்வதற்கான தகுதி போட்டி சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் பள்ளியில் நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story