தமிழ்நாடு செஸ் வீராங்கனை வைஷாலி சாதனை!


தமிழ்நாடு செஸ் வீராங்கனை வைஷாலி சாதனை!
x

image courtesy; twitter/ @FIDE_chess

தினத்தந்தி 6 Nov 2023 7:26 AM GMT (Updated: 6 Nov 2023 7:37 AM GMT)

2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள மகளிருக்கான செஸ் கேண்டிடேட் தொடரில் விளையாட வைஷாலி தேர்வாகி உள்ளார்.

லண்டன்,

பிரிட்டனில் நடைபெற்ற பிட் கிராண்ட் ஸ்விஸ் செஸ் தொடரில் தமிழக வீராங்கனை வைஷாலி சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிச் சுற்றில் மங்கோலிய வீராங்கனை பத்குயாக் முங்குந்துலுடன் வைஷாலி மோதினார். இந்த போட்டி டிராவில் முடிவுற்றது. எனினும் இத்தொடரில் அதிக புள்ளிகள் பெற்றவர் என்ற முறையில் சாம்பியன் பட்டத்தை வைஷாலி கைப்பற்றினார்.

இந்த வெற்றி மூலம் அடுத்தாண்டு கனடாவில் நடைபெற உள்ள மகளிருக்கான செஸ் கேண்டிடேட் தொடரில் விளையாடவும் வைஷாலி தேர்வாகி உள்ளார்.

ஏற்கனவே ஆண்கள் பிரிவில் உலகக்கோப்பையில் வெள்ளிப்பதக்கம் வென்றதன் மூலம் அவருடைய சகோதரர் பிரக்ஞானந்தா கேண்டிடேட் தொடருக்கு தேர்வாகிய நிலையில் தற்போது வைஷாலியும் மகளிர் பிரிவில் தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story