உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: 3ம் சுற்றுக்கு சாய்னா நேவால் முன்னேற்றம்


உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: 3ம் சுற்றுக்கு சாய்னா நேவால் முன்னேற்றம்
x

கோப்புப்படம்

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

டோக்கியோ,

27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. அதில் கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 21-19, 21-9 என்ற நேர்செட்டில் ஹாங்காங்கின் சியுங் நாகன் யியை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறி இருந்தார்.

இந்நிலையில் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் 3ம் சுற்றுக்கு இந்திய வீராங்கனை சாய்னா நேவால் முன்னேறி உள்ளார். மகளிர் ஒற்றையர் பிரிவு 2ம் சுற்று ஆட்டத்தில், ஜப்பான் வீராங்கனை நொசோமி ஒகுஹாராவுடன் சாய்னா நேவால் ஆடவிருந்தார். எனினும் காயம் காரணமாக நொசோமி விலகியதால் சாய்னா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இன்று காலை நடைபெறும் 3ம் சுற்றுப் போட்டியில் தாய்லாந்து வீராங்கனையுடன் சாய்னா நேவால் மோத உள்ளார்.


Next Story