உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு மேலும் இரு பதக்கம்


உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு மேலும் இரு பதக்கம்
x

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் இரு பதக்கம் கிடைத்துள்ளது.

பாகு,

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) போட்டியில் டென்மார்க் வீராங்கனை ரிக்கி மாங் இஸ்பென், இந்திய வீராங்கனை அஞ்சும் மோட்ஜில் ஆகியோர் முறையே முதல் 2 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தனர். இறுதிசுற்றில் அஞ்சும் மோட்ஜில் 12-16 என்ற புள்ளி கணக்கில் ரிக்கி மாங் இஸ்பெனிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்டார்.

இதே போல் ஆண்கள் அணிகளுக்கான 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) பிரிவில் கோல்டி குர்ஜார், ஸ்வப்னில் குசேல், தீபக்குமார் ஆகியோர் அடங்கிய இந்திய அணி இறுதிப்போட்டியில் 7-17 என்ற புள்ளி கணக்கில் குரோஷியாவிடம் தோற்று வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது. இந்த தொடரில் இந்தியா இதுவரை ஒரு தங்கம் மற்றும் 3 வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது


Next Story