மலேசிய ஓபன் பேட்மிண்டன்: சாய்னா, ஸ்ரீகாந்த் தோல்வி


மலேசிய ஓபன் பேட்மிண்டன்: சாய்னா, ஸ்ரீகாந்த் தோல்வி
x

மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி சாய்னா, ஸ்ரீகாந்த் தோல்வியடைந்தனர்.

மொத்தம் ரூ.10¼ கோடி பரிசுத்தொகைக்கான மலேசிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நேற்று தொடங்கியது. இதன் பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் காமன்வெல்த் சாம்பியனான இந்தியாவின் சாய்னா நேவால் 12-21, 21-17, 12-21 என்ற செட் கணக்கில் சீனாவின் ஹன் யூவிடம் போராடி தோல்வி அடைந்தார். ஆண்கள் ஒற்றையரில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஸ்ரீகாந்த் (இந்தியா) 19-21, 14-21 என்ற நேர் செட்டில் ஜப்பானின் கென்டோ நிஷிமோடோவிடம் பணிந்தார்.

பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் திரீஷா ஜாலி- காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-19, 21-14 என்ற நேர் செட்டில் ஹாங்காங்கின் யேங் நிகா டிங்- யேங் புய் லாம் இணையை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.

இன்று களம் இறங்கும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் பி.வி.சிந்து முதல் சுற்றில் முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரினுடன் (ஸ்பெயின்) பலப்பரீட்சை நடத்துகிறார்.


Next Story