போக்குவரத்து விதி மீறல்; 487 பேர் மீது வழக்கு

போக்குவரத்து விதி மீறல்; 487 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது

Update: 2021-03-31 18:43 GMT
ராமநாதபுரம்
ராமநாதபுரம் பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைத்துரை தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் போக்குவரத்து மற்றும் சாலை விதிகளை மீறியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்பட்டது. இவ்வாறு செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டிச்சென்ற 25 பேர் மீதும், அதிக பாரம் ஏற்றிச்சென்றதாக ஒருவர் மீதும், சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச்சென்றதாக 2 பேர் மீதும், தலைக்கவசம் அணியாமல் சென்ற 256 பேர் மீதும், தலைக்கவசம் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்ற 56 பேர் மீதும், சீட்பெல்ட் அணியாமல் சென்றதாக 11 மீதும், இதர பிரிவுகளின் கீழ் 136 பேர் மீதும் என மொத்தம் 487 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.75 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்