புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
மத்தூர் அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
மத்தூர்:
மத்தூர் போலீசார் தொகரப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு கடை ஒன்றில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற அதே ஊரை சேர்ந்த பாஸ்கர் (வயது47) என்பவரை போலீசார் கைது செய்தனர். கடையில் விற்பனைக்கு வைத்திருந்த ரூ.2,700 மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.