பெங்களூருவில் வங்காளதேச பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் கைது

பெங்களூருவில் வங்காளதேச பயங்கரவாத இயக்கத்தின் தலைவரை தேசிய புலனாய்வு பிரிவு கைது செய்துள்ளது.

Update: 2018-08-07 11:26 GMT
பெங்களூரு,

பீகார் மாநிலம் புத்தகயாவில் இவ்வருட தொடக்கத்தில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரித்தது. இப்போது, இவ்வழக்கில் தொடர்புடைய வங்காளதேச பயங்கரவாதியை தேசிய புலனாய்வு பிரிவு கைது செய்துள்ளது. ஜமாத்-உல்-பங்களாதேஷ் இயக்கத்தின் தலைவன் முகமது ஜாகிதுல் இஸ்லாமை கைது செய்துள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமநகரா பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த முகமது ஜாகிதுல் இஸ்லாமிடம் இருந்து வெடிப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்