டெல்லியில் அவலம்: மூன்று வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை

தலைநகர் டெல்லியில் மூன்று வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

Update: 2018-12-17 03:51 GMT
புதுடெல்லி,

தெற்கு டெல்லியில் உள்ள ஒரு பகுதியில் மூன்று வயது  பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்  நடைபெற்றுள்ளது.  குழந்தை இருந்த அதே அடுக்கு மாடி குடியிருப்பில், பாதுகாவலராக பணியாற்றும் 40-வயது நபர் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது.  

குழந்தையின் பெற்றோர்கள் தங்கள் பணிகளுக்காக வெளியில் சென்றிருந்த சமயத்தில் இந்த கோர சம்பவம் நடைபெற்றுள்ளது.  குழந்தை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. தற்போது குழந்தையின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தை அறிந்த குடியிருப்பு வாசிகள்,  பாலியல் வன்கொடுமை செய்த நபரை பிடித்து கடுமையாக தாக்கினர். பிறகு, இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார், அந்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.   

மேலும் செய்திகள்