மராட்டியத்தை புரட்டி எடுக்கும் கொரொனா: இன்று ஒரேநாளில் 5493 பேருக்கு தொற்று உறுதி

மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 5493 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2020-06-28 15:28 GMT
மும்பை,

மராட்டியத்தை ஆட்கொல்லி கொரோனா வைரஸ் புரட்டி போட்டு உள்ளது. இங்கு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் பலியானவர்களின் எண்ணிக்கையும் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் இன்று ஒரேநாளில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 5,493 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,64,626 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 156 பேர் நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதில் கடந்த 48 மணி நேரத்தில் பலியானவர்கள் 60 பேர். அதற்கு முன்பாக பலியானவர்கள் 96 பேர்.

இன்று மாநிலத்தில் 2,330 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 86,575 ஆக உயர்ந்துள்ளது. 70,067 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்