டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு

டெல்லியில் பிரதமர் மோடியை முதலமைச்சர் பழனிசாமி பிரதமர் இல்லத்தில் சந்தித்தார்.

Update: 2021-01-19 06:03 GMT
சென்னை, 

தமிழக சட்டசபைக்கு அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் அரசியல் களம், முன்னெப்போதும் இல்லாத வகையில் பரபரப்பாகி வருகிறது. இந்த பரபரப்பான சூழலில், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2 நாள் பயணமாக டெல்லிக்கு நேற்று விமானத்தில் புறப்பட்டு சென்றார்.

அவருடன் அமைச்சர் ஜெயக்குமார், தமிழக அரசு தலைமைச் செயலாளர் க.சண்முகம், முதல்-அமைச்சரின் செயலாளர்கள் சாய்குமார், செந்தில்குமார் ஆகியோரும் சென்றனர். நேற்று பகல் 3 மணிக்கு டெல்லி சென்றடைந்த முதலமைச்சர் பழனிசாமி, இரவு 7.30 மணிக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் இல்லத்துக்கு சென்று, அவரை சந்தித்து பேசினார்.

இதனை தொடர்ந்து இன்று பிரதமர் நரேந்திர மோடியை பிரதமர் இல்லத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். புத்தாண்டில் முதல் முறையாக பிரதமர் மோடியை சந்தித்துள்ள எடப்பாடி பழனிசாமி, அவருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தமிழகத்தில் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பின் போது அரசியல் ரீதியில் கூட்டணி விவகாரங்கள்,தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், தமிழக திட்டங்களுக்கு கூடுதல் நிதி வழங்க பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்