ஆந்திராவில் மேலும் 1,546-பேருக்கு கொரோனா தொற்று

ஆந்திராவில் மேலும் 1,546-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-08-02 15:36 GMT
அமரவாதி,

ஆந்திராவில் மேலும் 1,546- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 1,968-பேர் குணம் அடைந்துள்ளனர். 

கொரோனா தொற்று பாதிப்பு  காரணமாக இன்று ஒரே நாளில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் மாநிலத்தில் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 20,582- ஆக உள்ளது. ஆந்திராவில் கொரோனா பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 13,410- ஆக உயர்ந்துள்ளது.

தெலுங்கானாவில் மேலும் 591- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் மேலும் 2-பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து 643- பேர் இன்று குணம் அடைந்துள்ளனர். தெலுங்கானாவில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 8,819- ஆக உள்ளது. 

மேலும் செய்திகள்