மத்திய பிரதேசத்தில் கார் மரத்தில் மோதி 5 பேர் உயிரிழப்பு
மத்திய பிரதேசத்தில் கார் மரத்தில் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.;
கோப்புப்படம்
போபால்,
மத்திய பிரதேசம் உமாரியாவில் இருந்து 5 பேர் காரில் ஒரு விழாவுக்கு சென்று விட்டு ஷாஹோல் நகருக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர். நேற்று அதிகாலை மஜ்கவா கிராமம் அருகே கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது கார் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. இதில் காரில் இருந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இருவர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.
உயிரிழந்த அனைவரும் 30 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள். உயிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அரசு ஊழியர்கள். விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.