குஜராத்: கத்தியால் தாயையும், சகோதரியையும் தாக்கிய கல்லூரி மாணவன் கைது

குஜராத்தில் கல்லூரி மாணவன், தனது சகோதரியை வீட்டிற்கு வெளியே கத்தியால் பலமுறை குத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

Update: 2022-06-23 07:12 GMT

கோப்புப்படம் 

அகமதாபாத்,

குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் உள்ள வர்ணமாவில் கல்லூரியில் பயிலும் மாணவன் ஒருவன் தனது சகோதரியை வீட்டிற்கு வெளியே கத்தியால் பலமுறை குத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அப்போது தனது தாயையும் கத்தியால் தாக்கியுள்ளான்.

இதில் மாணவனால் காயமடைந்த அவனது தாயும், சகோதரியும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகராறின் போது காயமடைந்த மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றான்.

பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், மானவனை கைதுசெய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறும்போது, குற்றம் சாட்டப்பட்டவர் கடந்த சில நாட்களாக சில நிதிப் பிரச்சினைகளால் மன உளைச்சலில் இருந்ததாகவும், இதனால் வீட்டில் ஏற்பட்ட பிரச்சினையில் அவரது குடும்ப உறுப்பினர்களைத் தாக்கியதாகவும் போலீசார் கூறினார். மேலும், மாணவன் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்