3 சிறுமிகளை கிணற்றில் வீசி கொன்ற தாய்; தானும் தற்கொலைக்கு முயன்றார்

3-வதும் பெண் குழந்தை பிறந்ததால் விரக்தி அடைந்து 3 சிறுமிகளை கிணற்றில் வீசி கொன்ற தாய் பின்னர் தானும் தற்கொலைக்கு முயன்றார்.

Update: 2023-08-25 21:51 GMT

பாகல்கோட்டை:

பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டி தாலுகா கும்பரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சங்கீதா. இவரது கணவர் அனுமன். இந்த தம்பதிக்கு ஸ்ரீசைல் (5), சரவாணி (3) என்ற 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் சங்கீதா 3-வது முறையாக கர்ப்பமானார். அப்போது அவர் தனக்கு மகன் பிறக்க வேண்டும் என வேண்டி இருந்தார். ஆனால் அவருக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. இதனால் அவர் மனமுடைந்தார். இந்த நிலையில் சங்கீதா தனது 3 குழந்தைகளுடன் அருகில் உள்ள விளைநிலத்திற்கு சென்றார். பின்னர் தனது குழந்தைகளை கிணற்றில் வீசிவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றார்.

இதுகுறித்து அறிந்ததும் அங்கு வந்த அவரது கணவர், கிணற்றில் குதித்து மனைவி மற்றும் குழந்தைகளை மீட்டு மேலே கொண்டு வந்தார். எனினும் அவரது 3 குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தன. சங்கீதா உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஜமகண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்