ஆந்திர பிரதேசத்தில் சாலை விபத்து: 6 பேர் பலி; 10 பேர் காயம்

ஆந்திர பிரதேசத்தில் நிறுத்தி இருந்த மினிவேன் மீது லாரி மோதியதில் 6 பேர் இன்று உயிரிழந்து உள்ளனர்.

Update: 2022-05-30 03:32 GMT

பல்நாடு,

ஆந்திர பிரதேசத்தின் பல்நாடு மாவட்டத்தில் ரென்டசிந்தலா கிராமத்தில், ஸ்ரீசைலத்தில் இருந்து வந்த மினிவேன் ஒன்று சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அதில் 39 பயணிகள் இருந்துள்ளனர்.

இந்நிலையில், அந்த வழியே வந்த லாரி ஒன்று, நின்றிருந்த மினிவேன் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில், மினிவேன் புரண்டு தலைகுப்புற கவிழ்ந்தது. வேனில் இருந்த பயணிகள் பலர் காயமடைந்தனர்.

அவர்கள் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை காப்பாற்ற சென்றனர். இந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்து உள்ளனர். 10 பேர் காயம் அடைந்து உள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்த குர்ஜாலா போலீசார் சம்பவ பகுதியில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். விபத்தில் காயமடைந்த நபர்கள் 10 பேரும் உடனடியாக மீட்கப்பட்டனர். அவர்கள், குர்ஜாலா அரசு மருத்துவமனை மற்றும் நரசராவ்பேட்டை மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

குர்ஜாலா டி.எஸ்.பி. ஜெய்ராம் தலைமையிலான போலீசார் சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்