நாகையில் இருந்து இன்று முதல் இலங்கைக்கு பயணிகள் கப்பல்: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

நாகையில் இருந்து இன்று முதல் இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.

Update: 2023-10-13 23:45 GMT

நாகப்பட்டினம், 

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு 2 முறை தள்ளி வைக்கப்பட்டது.

இந்தநிலையில், இன்று(சனிக்கிழமை) காலை 7 மணிக்கு இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை காணொலிக்காட்சி மூலம் டெல்லியில் இருந்தபடி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்