லாரி டிரைவரிடம் பணம் பறித்த 2 பேர் கைது

பாளையங்கோட்டையில் லாரி டிரைவரிடம் பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-07-29 19:52 GMT

பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் உள்ள ஒரு பர்னிச்சர் கடைக்கு சரக்குகளை ஏற்றிக்கொண்டு கடந்த 14.5.2022 அன்று ஒன்று லாரி வந்தது. இரவு நேரம் என்பதால் லாரி டிரைவர் லாரியில் படுத்து தூங்கினாராம். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் செல்போன் பறித்துச் சென்றனர். இதுகுறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் பணம் பறிப்பில் ஈடுபட்டதாக நெல்லை டவுன் பகுதியை சேர்ந்த லட்சுமணன் (வயது 19), ஆறுமுகநேரியை பகுதியை சேர்ந்த பிரேம் (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்