கல்லூரி மாணவியை வாலிபர் தாக்கியதால் பரபரப்பு

நெல்லை சந்திப்பில் கல்லூரி மாணவியை வாலிபர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-07-14 18:39 GMT

நெல்லை சந்திப்பில் பஸ்நிலையம் திறக்கப்படாவிட்டாலும், அதனை சுற்றிலும் தற்போது டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் காலை மற்றும் மாலை நேரத்தில் மாணவ-மாணவிகள், பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்த நிலையில் நேற்று மாலை ஒரு கல்லூரி மாணவியை திடீரென்று மற்றொரு மாணவர் தாக்கினார். அவருக்கு ஆதரவாக 2 மாணவர்கள் செயல்பட்டு உள்ளனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் 3 மாணவர்களையும் மடக்கிப்பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர். இதில் அந்த மாணவியின் சகோதரர் தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் சந்திப்பு பஸ் நிலைய பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்