ரெயிலில் அடிபட்டு முதியவர் பலி

ரெயிலில் அடிபட்டு முதியவர் பலி

Update: 2022-12-31 19:00 GMT

அய்யலூர் அருகே உள்ள களர்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (வயது 62). இவர் நேற்று காலையில் அதே பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்ற வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த கணேசனுக்கு தனலட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்