கார் மோதி மூதாட்டி சாவு

விபத்தில் கார் மோதி மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-10-24 20:23 GMT

விருதுநகர் அய்யனார்நகரை சேர்ந்தவர் சண்முகத்தாய் (வயது68). இந்நகர் தேசிய நெடுஞ்சாலையை கடந்த போது அந்த வழியாக வந்த கார், சண்முகத்தாய் மீது மோதியதில் படுகாயம் அடைந்து விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கார் டிரைவர் திருச்சி ஐயப்பன் நகரை சேர்ந்த மதுசூதன்ராஜ் (27) என்பவர் மீது விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags:    

மேலும் செய்திகள்