இலங்கையின் தெற்கு மாகாணத்தில் 5 பேர் சுட்டுக்கொலை

பரபரப்பான நெடுஞ்சாலையில் பட்டப்பகலில் நடந்த இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-01-22 23:06 GMT

கோப்புப்படம்

கொழும்பு,

இலங்கையின் தெற்கு மாகாணம் பெலியட்டா நகரில் உள்ள நெடுஞ்சாலையில் நேற்று காலை ஜீப் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது மற்றொரு வாகனத்தில் ஜீப்பை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் சிலர் ஜீப்பை வழிமறித்தனர்.

அதன் பின்னர் அந்த மர்ம நபர்கள் ஜீப்பில் இருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் 5 பேரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. அவர்களில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், காயமடைந்த மற்றொருவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். பட்டப்பகலில் பரபரப்பான நெடுஞ்சாலையில் நடந்த இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூலிப்படை கும்பலை சேர்ந்தவர்களே இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே அந்த கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் கூலிப்படை கும்பல்களின் செயல்பாடுகளை தடுப்பதற்கான சிறப்பு நடவடிக்கையை போலீசார் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கியதும், இதுவரை சுமார் 40 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்