ஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.;

Update:2025-06-06 06:24 IST

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரின் தோடா பகுதியில் இன்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 3.55 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 33.18 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 75.69 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்