சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டுகள் இடிந்து விபத்து - 3 பேர் காயம்
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
சென்னை நொச்சிக்குப்பத்தில் 3 அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அந்த அடுக்குமாடியில் பலர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டுகள் இன்று திடீரென இடிந்து விழுந்தது. இதனால், வீட்டின் மாடியில் பலர் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு, மீட்புக்குழுவினர் மாடியில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டனர்.
அதேவேளை, இந்த விபத்தில் 15 வயது சிறுமி உள்பட 3 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.