பொதுமக்களிடம் கனிவுடன் நடக்க வேண்டும்: எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் போலீசாருக்கு அறிவுரை
திருச்செந்தூர் காவல் நிலையத்தில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் இன்று வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்.;
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் இன்று (19.6.2025) திருச்செந்தூர் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் காவல் நிலைய போலீசாரின் உடைமைகளை (Kit Inspection) பார்வையிட்டும், அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் முக்கிய வழக்கு கோப்புகளை பார்வையிட்டும் ஆய்வு செய்தார்.
மேலும் அவர், திருச்செந்தூர் காவல் நிலைய போலீசாரிடம் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், புகார் மனு பதிவு செய்ததற்கான வரவேற்பு சீட்டை (Reception Slip) வரவேற்பாளர் மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கினார். இந்த நிகழ்வின்போது திருச்செந்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் இன்னோஷ்குமார் உள்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.