அவசரகால பணிகள்: திருநெல்வேலியில் நாளை மின்தடை
மேலப்பாளையம் 2 பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட தருவை பீடரில் அவசர கால பணிகள் நடைபெற உள்ளது.;
திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், மேலப்பாளையம் 2 பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட தருவை பீடரில் அவசர கால பணிகள் நடைபெற இருப்பதால் ஜே.ஜே.நகர், ஜோதிபுரம், அட்ட கம்பெணி, கொக்கட்டிகுளம், டக்கம்மாள்புரம், ஆரைக்குளம் ரோடு ஆகிய பகுதிகளில் நாளை (30.6.2025) காலை 10 மணி முதல் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் தடைபடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.