கொழுக்கட்டை செய்து தராததால் தூக்கிட்டு மாணவி தற்கொலை
நேற்று முன்தினம் மாலை மோகனபிரியா, தாயாரிடம் கொழுக்கட்டை செய்து தருமாறு கேட்டுள்ளார்.;
மரக்காணம்,
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சக்தி நகர் இ.பி. சாலையில் வசிப்பவர் முனுசாமி. இவரது மகள் மோகன பிரியா(14). அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை மோகன பிரியா, தாயாரிடம் கொழுக்கட்டை செய்து தருமாறு கேட்டு அடம் பிடித்துள்ளார்.
அப்போது அவர் நாளைக்கு செய்து தருகிறேன் எனக் கூறியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மாணவி திடீரென வீட்டில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். உடனடியாக அவரை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டு சென்றனர். அங்கு மாணவியைபரிசோதித்த டாக்டர்கள், வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.