சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணியில் ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு ஏன்..? கேப்டன் ரோகித் சர்மா விளக்கம்
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.;
image courtesy: AFP
மும்பை,
8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது தொடக்க லீக்கில் பிப்.20-ந்தேதி வங்காளதேசத்தையும், 23-ந்தேதி பாகிஸ்தானையும், மார்ச்.2-ந்தேதி நியூசிலாந்தையும் சந்திக்கிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா தலைமையிலான அந்த அணியில் இளம் தொடக்க ஆட்டக்காரர் ஆன ஜெய்ஸ்வால் முதல் முறையாக 50 ஓவர் வடிவிலான போட்டிகளுக்கு தேர்வாகியுள்ளார்.
இந்நிலையில் ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்படதற்கான காரணம் குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "ஜெய்ஸ்வால் இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடாவிட்டாலும், கடந்த சில மாதங்களாக அவர் வெளிப்படுத்திய அபாரமான பேட்டிங்கை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் அவரைத் தேர்ந்தெடுத்தோம். அவர் திறமையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், சில சமயங்களில் நீங்கள் அதைச் செய்ய வேண்டியிருக்கும்" என்று கூறினார்.