
நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள வயநாட்டில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மீட்பு பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. பல வீடுகள் மண்ணோடு மண்ணாக அடித்து செல்லப்பட்டன. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. தற்போது வரை பலி எண்ணிக்கை 36-ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வயநாடு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீட்பு பணிகள் தொடர்பாக நேரில் சென்று அறியவும் மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும் சம்பவ இடத்திற்கு செல்ல ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





