மணிக்கு 7 கி.மீட்டர் வேகத்தில் நகரும் புயல்

வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறிய பின்னர் நகரும் வேகம் சற்று குறைந்துள்ளது. 15 கி.மீ வேகத்தில் நகர்ந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது 7 கி.மீ வேகத்தில் நகர்கிறது. புயல் இன்று கரையைக் கடக்கக்கூடும் என்பதால், தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளிலும் சூறாவளிக் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மணிக்கு 70 கி.மீ. முதல் 80 கி.மீ. வரையிலும், இடையிடையே 90 கி.மீ. வேகத்திலும், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 70 கி.மீ. வேகத்திலும் பலத்த தரைக்காற்று வீசக்கூடும்.தற்போதைய நிலவரப்படி, சென்னையில் இருந்து 230 கி.மீட்டர் தொலைவில் புயல் உள்ளது






