வேளச்சேரியில் படகுகளில் மீட்கப்படும் பொதுமக்கள்


வேளச்சேரியில் படகுகளில் மீட்கப்படும் பொதுமக்கள்
x
Daily Thanthi 2024-10-15 10:39:23.0
t-max-icont-min-icon

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுவடைய இருக்கிறது. இதன் எதிரொலியாக பல்வேறு இடங்களில்  கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்தநிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில், வேளச்சேரி ஏஜிஎஸ் காலனியில் 10க்கும் மேற்பட்ட தெருக்களில் வெள்ளநீர் சூழ்ந்தது. முழங்கால் வரை வெள்ளநீர் சூழ்ந்ததால் வெள்ளநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. வீடுகளில் சிக்கிய முதியவர்கள், பெரியவர்கள் குழந்தைகளை தீயணைப்பு துறையினர் படகுகள் மூலம் மீட்டனர். மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

1 More update

Next Story