எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்..?  ... ... வலுவிழந்தது பெஞ்சல் புயல்; உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
x
Daily Thanthi 2024-12-01 08:53:01.0
t-max-icont-min-icon

எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்..?



வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றது என அறிவிக்கப்பட்டது. இந்த புயலுக்கு 'பெஞ்சல்' எனவும் பெயர் சூட்டப்பட்டது. இந்த 'பெஞ்சல்' புயல் நேற்று இரவு 10.30 மணி முதல் 11.30 மணிக்குள் முழுமையாக கரையக் கடந்த விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த சூழலில் பெஞ்சல் புயல் நகராமல் புதுச்சேரி அருகிலேயே நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்திருந்தார்.

பெஞ்சல் புயல் முழுவதுமாக கரையை கடந்தநிலையில் இன்றும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெட் அலர்ட் மாவட்டங்கள் (அதி கனமழை)

கள்ளக்குறிச்சி

விழுப்புரம்

கடலூர்

ஆரஞ்சு அலர்ட் மாவட்டங்கள் (மிக கனமழை)

காஞ்சிபுரம்

செங்கல்பட்டு

திருவண்ணாமலை,

தருமபுரி

சேலம்

பெரம்பலூர்

அரியலூர்

தஞ்சை

திருவாரூர்

மயிலாடுதுறை

நாகப்பட்டினம்

மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் (கன மழை)

சென்னை

திருவள்ளூர்

ராணிப்பேட்டை

திருப்பத்தூர்

வேலூர்

கிருஷ்ணகிரி

ஈரோடு

நாமக்கல்

புதுக்கோட்டை

திருச்சி

நாளை 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிககனமழைக்கு வாய்ப்புள்ளது.

நாளை 8 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

1 More update

Next Story