பாதிப்புகளை படகில் சென்று ஆய்வு செய்த துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன்


பாதிப்புகளை படகில் சென்று ஆய்வு செய்த துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன்
x
Daily Thanthi 2024-12-01 09:24:06.0
t-max-icont-min-icon

பெஞ்சல் புயல் காரணமாக பெய்த பெருமழையால் புதுச்சேரியில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. பல்வேறு சேதங்களும் ஏற்பட்டுள்ளன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் இன்று படகில் சென்று பார்வையிட்டார்.

புதுச்சேரி கடற்கரை சாலை, வைத்திகுப்பம் கடற்கரை பகுதி, தேங்காய்திட்டு துறைமுகம் ஆகியவற்றை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து ஆரியபாளையம் மேம்பாலம், சங்கராபரணி ஆறு, வில்லியனூர் துணை மின் நிலையம் ஆகியவற்றையும் பார்வையிட்டார். மேலும் கனகன் ஏரியைப் பார்வையிட்டார். அப்போது உள்துறை மந்திரி நமச்சிவாயம், மின்துறை தலைமை கண்காணிப்புபப் பொறியாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.

1 More update

Next Story