வண்டலூர் பூங்கா இன்று செயல்படாது


வண்டலூர் பூங்கா இன்று செயல்படாது
x
Daily Thanthi 2024-11-29 19:15:11.0
t-max-icont-min-icon

சென்னை,

புயல் எச்சரிக்கையையொட்டி சென்னையில் உள்ள 786 பூங்காக்கள் மூடப்படுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

அதேபோன்று கடற்கரைக்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் பொதுமக்கள் யாரும் கடற்கரை பகுதிகளுக்கோ அல்லது பூங்காவிற்கோ செல்ல வேண்டாம். பூங்காக்களில் உள்ள பழமையான மரங்கள் விழுந்து விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால் பாதுகாப்பு கருதி அனைத்து பூங்காக்களும் மூடப்படுவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இன்று (சனிக்கிழமை) ‘‘பெஞ்ஜல்'' புயல் கரையை கடக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று செயல்படாது. பொதுமக்கள் பார்ப்பதற்கு தடை செய்யப்பட்டு மூடப்படுகிறது.

1 More update

Next Story