அயோத்தி ராமர் கோவில் வளாகத்தில் பிரதமர் மோடி... ... ராமர் சிலை பிரதிஷ்டை: பக்தர்கள் வெள்ளத்தில் அயோத்தி
x
Daily Thanthi 2024-01-22 08:59:05.0

அயோத்தி ராமர் கோவில் வளாகத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதன் முக்கிய விவரங்கள் வருமாறு:

  • பல ஆண்டு காத்திருப்புக்கு பிறகு இன்று ராமர் வந்து விட்டார்.
  • ராமர் இனி கூடாரத்தில் வசிக்க வேண்டிய நிலை இருக்காது
  • கூடாரத்தில் இருந்த பால ராமருக்கு தற்போது அழகிய கோவில் கிடைத்துள்ளது.
  • இந்த நேரத்தில் கடவுள் ராமர் நமக்கு ஆசிர்வாதம் அளிக்கிறார்
  • இந்த நன்னாளில் நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
  • இன்றைய நாள் வரலாற்று நிகழ்வாக அமைந்துள்ளது.
  • அடிமை தனத்தில் இருந்து நாம் விடுதலை பெற்றுள்ளோம்.
  • கோவில் கட்டுவதற்கு இவ்வளவு காலம் ஆனதற்கு ராமரிடம் மன்னிப்பு கோருகிறேன்
  • கால சக்கரத்தில் இன்றைய நாள் ஒரு பொற்காலம்.
  • நாட்டின் நியாயத்தை வழங்குவதற்கு நியாய ராஜ்ஜியம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. குறைகள் இருப்பின் ராமர் நம்மை மன்னிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
  • 1000 ஆண்டுகளுக்கும் பிறகும் மக்கள் இந்த நாளை நினைவில் வைத்திருப்பார்கள்.

Next Story