
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், முதல் பெண்மணி ஜில் பைடன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வெள்ளை மாளிகையில் நடைபெறும் அரசு விருந்தில் பங்கேற்றுள்ளனர்.
முன்னதாக இந்த விருந்தில் கலந்து கொள்ள மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா , கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை , அமெரிக்க வர்த்தக செயலாளர் ஜினா ரைமொண்டோ , பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி.
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, Adobe இன் CEO சாந்தனு நாராயண், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், Zerodha இணை நிறுவனர் நிகில் காமத்.
இந்திய-அமெரிக்க திரைப்படத் தயாரிப்பாளர் எம். நைட் ஷியாமலன் , மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, பெப்சிகோவின் முன்னாள் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான இந்திரா நூயி, முகேஷ் அம்பானியும் நீதா அம்பானியும் வெள்ளை மாளிகைக்கு அரசு விருந்துக்கு வந்திருந்தனர்.






