சரண் அடைந்த 800 உக்ரைன் வீரர்கள் - ரஷியா தகவல்

மரியுபோல் நகரில் உள்ள அஜோவ் உருக்காலையில் உள்ள சுரங்கங்களில் தங்கியிருந்த வீரர்கள் 1,000 பேர் வெளியேற்றப்பட்டனர் என தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 800 பேர் சரண் அடைந்துள்ளதாக ரஷியா கூறுகிறது.
இதையொட்டி ரஷிய ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 771 உக்ரைன் படை வீரர்கள் சரண் அடைந்துள்ளனர். கடந்த 16-ந் தேதியில் இருந்து 1,730 பேர் ஆயுதங்களை கைவிட்டுள்ளனர். சரண் அடைந்துள்ள வீரர்களில் 80 பேர் காயம் அடைந்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





