
பாகிஸ்தானுக்கு எதிராக இதை செய்வாரா..? சூர்யகுமார் யாதவை விமர்சித்த இந்திய முன்னாள் வீரர்
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் இதேபோல் செய்வாரா? என்று இந்திய முன்னாள் வீரர ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “இது ஒரு குறிப்பிட்ட நிகழ்வுக்கு உரியது என்று நான் கருதுகிறேன். ஒருவேளை இதே நிகழ்வு பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி சமநிலையில் இருக்கும்போது அந்த அணியின் கேப்டன் சல்மான் ஆஹாவுக்கு எதிராக நடைபெற்றிருந்தால் சூர்யகுமார் இதை செய்வாரா?. நிச்சயம் செய்யமாட்டார். அந்த சமயத்தில் சஞ்சு சாம்சன் நல்ல விழிப்புணர்வுடன் செயல்பட்டார். என்னைப் பொறுத்த வரை பேட்ஸ்மேன் வெள்ளைக் கோட்டைக்கு வெளியே நின்றால் அவுட். இது விதிகளுக்குட்பட்டது. நடுவர் ஆட்டமிழந்ததாக அறிவித்துவிட்டார். பிறகு வெளியே இருங்கள்” என்று தெரிவித்தார்.






