போர் குற்றங்கள் விசாரணை நடத்த உக்ரைனுக்கு உதவ உறுதிமொழி அளித்த அமெரிக்கா


போர் குற்றங்கள் விசாரணை நடத்த உக்ரைனுக்கு உதவ உறுதிமொழி அளித்த அமெரிக்கா
Daily Thanthi 2022-06-21 16:09:50.0



கீவ்,

உக்ரைனில் போர் குற்றங்கள் பற்றிய விசாரணைக்கு அந்நாட்டுக்கு உதவ அமெரிக்கா உறுதிமொழி அளித்து உள்ளது.

அமெரிக்க அரசு வழக்கறிஞர் மெர்ரிக் கார்லேண்ட், போர் நடந்து வரும் உக்ரைன் நகருக்கு சென்றுள்ளார். அவர் கூறும்போது, நியாயமற்ற ரஷியாவின் போருக்கு மத்தியில், உக்ரைனிய மக்களுக்கு அமெரிக்காவின் அசைக்க முடியாத ஆதரவை வெளிப்படுத்த நான் வந்துள்ளேன் என கூறியுள்ளார்.

முழு உலகமும் காணக்கூடிய அட்டூழியங்கள் அல்லது போர் குற்றங்கள் புரிந்தவர்களை, அதற்கு பொறுப்பேற்க வைக்கும் உக்ரைனிய அதிகாரிகளுக்கு உதவ அமெரிக்கா எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றிய நம்முடைய விவாதங்களை தொடர நான் வந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.


Next Story