"தமிழ்நாட்லயும் இருக்கு..." - ராமேசுவரத்தில் சாமி தரிசனம் செய்த பின் ரிஷப் ஷெட்டி சொன்ன விஷயம்


Actor Rishabh Shetty had darshan in Rameswaram
x

காந்தாரா சாப்டர் 1 படம் விவசாயம், கிராம வாழ்கையை பிரதிபலித்ததால் மக்களுக்கு பிடித்திருப்பதாக ரிஷப் ஷெட்டி கூறினார்.

ராமேசுவரம் ,

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில், காந்தாரா பட இயக்குனரும், நடிகருமான ரிஷப் ஷெட்டி சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காந்தாரா சாப்டர் 1 படம் விவசாயம், கிராம வாழ்கையை பிரதிபலித்ததால் மக்களுக்கு பிடித்திருப்பதாக கூறினார்.

தமிழ்நாட்டிலும் அப்படம், பெரிய வெற்றி பெற்று இருப்பதாகவும், அதற்காக தமிழ் மக்களுக்கு மனமார்ந்த நன்றி எனவும் கூறினார். பின்பு, அவருடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

1 More update

Next Story