நீண்ட நாட்களுக்கு பிறகு நான் பார்த்த சினிமா- பைசன் படத்தை பாராட்டிய வைகோ


நீண்ட நாட்களுக்கு பிறகு நான் பார்த்த சினிமா- பைசன் படத்தை பாராட்டிய வைகோ
x
தினத்தந்தி 24 Oct 2025 5:31 PM IST (Updated: 25 Oct 2025 4:02 PM IST)
t-max-icont-min-icon

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, "பைசன்" படத்தை பாராட்டியுள்ளார்.

சென்னை,

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் ‘பைசன்’. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், லால், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது. இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் கொடுத்து வருகிறது.

இந்தநிலையில். 'பைசன்' படத்தை பார்த்து திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, "பைசன்" படத்தை பாராட்டியுள்ளார்.

அதாவது, 'நீண்ட நாட்களுக்கு பிறகு நான் பார்த்த ஒரு சினிமா இதை எடுத்த இயக்குனர் யார் என்று தேடவைத்தது மாரி செல்வராஜ். நீங்கள் தூரத்தில் இருக்கிறீர்கள் நான் இங்கிருந்தே பெரும் மன நிறைவோடு பைசனுக்காக உங்களை கட்டி தழுவுகிறேன் மாரி செல்வராஜ். அற்புதமான படைப்பு மாரி அருமை வாழ்த்துகள் “ என்று பாராட்டியுள்ளார்.

அதற்கு, நன்றி தெரிவித்து மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "பைசன் பார்த்துவிட்டு தொலைபேசியில் அழைத்து ஒரு மணி நேரத்துக்கு மேலாக பைசனை பாராட்டி உச்சிமுகர்ந்த பெரும் மரியாதைக்குரிய ஐயா வைகோ அவர்களுக்கு எங்கள் நன்றியையும் அன்பையும் தெரிவித்து கொள்கிறோம்." என்று பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story