காமன்வெல்த்: குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் சாகர் வெள்ளிப்பதக்கம் வென்றார்


காமன்வெல்த்: குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் சாகர் வெள்ளிப்பதக்கம் வென்றார்
x

காமன்வெல்த்தின் குத்துச்சண்டை போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாகர் இங்கிலாந்தின் டீலிசியஸ் ஓரியிடம் தோல்வியுற்று வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்.

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த்தில் இந்தியா இதுவரை 18 தங்கம், 14 வெள்ளி, 22 வெண்கலம் என 54 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் ஆண்களுக்கான (92 கிலோவுக்கு மேல்) குத்துச்சண்டை போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாகர் இங்கிலாந்தின் டீலிசியஸ் ஓரியை சந்தித்தார். இந்தப் போட்டியில் சாகர் 0-5 என்ற கணக்கில் இங்கிலாந்தின் டீலிசியஸ் ஓரியிடம் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.

இந்த பதக்கத்தின் மூலம் இந்தியாவின் பதக்க் எண்ணிக்கை 55-ஆக அதிகரித்து உள்ளது. இந்தியா 18 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம் என மொத்தம் 55 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.


Next Story