காமன்வெல்த்: ஆடவர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெண்கலப் பதக்கம் வென்றார்


காமன்வெல்த்: ஆடவர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெண்கலப் பதக்கம் வென்றார்
x

ஆடவர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் சிங்கப்பூரின் ஜியா ஹெங் தேவை வீழ்த்தி கிடாம்பி ஸ்ரீகாந்த் வெண்கலப் பதக்கம் வென்றார்.

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த்தில் இந்தியா இதுவரை 17 தங்கம், 13 வெள்ளி, 20 வெண்கலம் என 50 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5- வது இடத்தில் உள்ளது.

இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் சிங்கப்பூரின் ஜியா ஹெங் தேவை எதிர் கொண்டார். இப்போட்டியில் 21-15, 21-18 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார். இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது.


Next Story