காமன்வெல்த் பாரா-பளுதூக்குதல்: இந்தியாவுக்கு தங்கப்பதக்கம்..!


காமன்வெல்த் பாரா-பளுதூக்குதல்: இந்தியாவுக்கு தங்கப்பதக்கம்..!
x

image tweeted by @FirstpostSports

காமன்வெல்த் பாரா-பளுதூக்குதல் போட்டியில் சுதிர், தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இந்தியா இந்த காமன்வெல்த் போட்டியில் இதுவரை 5 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என 18 பதக்கங்களை வென்றுள்ளது. 7-வது நாளான நேற்று பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

இந்த நிலையில், ஆசிய போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சுதிர், காமன்வெல்த் போட்டியில் பங்கேற்றார். அவர் பாரா-பளுதூக்குதலில் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை தனது பெயரில் கைப்பற்றி புதிய சாதனை படைத்தார்.

காமன்வெல்த் போட்டியில் அவர் மொத்தம் 134.5 புள்ளிகளை பெற்ற நிலையில் தங்கப்பதக்கத்தை தன் வசப்படுத்தினார். இதன்மூலம் இந்தியா 6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களைப் பெற்று 7-வது இடத்தில் உள்ளது.



Next Story