காமன்வெல்த் மல்யுத்தம்: இந்தியாவின் திவ்யா கக்ரன் வெண்கலம் வென்று அசத்தல்


காமன்வெல்த் மல்யுத்தம்: இந்தியாவின் திவ்யா கக்ரன் வெண்கலம் வென்று அசத்தல்
x

 image tweeted by @FirstpostSports

காமன்வெல்த் மல்யுத்தப்போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது.

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 6 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலம் என 21 பதக்கங்களை வென்றுள்ளது.

8-வது நாளான நேற்று இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் கலந்து கொண்டனர். அந்த வகையில் இந்தியா அதிக பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளதாக கருதப்படும் மல்யுத்த போட்டிகள் நடைபெற்றன.

இதில் பெண்களுக்கான 68 கிலோ பிரிவில் இந்திய மல்யுத்த வீராங்கனை திவ்யா கக்ரன், ஃப்ரீஸ்டைல் பிரிவில் டோங்கா டைகர் லில்லி காக்கர் லெமாலியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார்.

முன்னதாக சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா மற்றும் தீபக் புனியா ஆகியோர் தங்கப் பதக்கங்களையும், அன்ஷு மாலிக் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

வெண்கலப் பதக்கப் போட்டியில் இந்தியாவின் மோஹித் க்ரேவாலும் களமிறங்க உள்ளார். அவர் ஜமைக்காவின் ஆரோன் ஜான்சனை எதிர்கொள்கிறார்.

1 More update

Next Story