காஞ்சிபுரம்: 21 அடி உயர சிவபெருமான் சிலைக்கு டிரோன் மூலம் பாலாபிஷேகம்

காஞ்சிபுரத்தில் 21 அடி உயர சிவபெருமான் சிலைக்கு டிரோன் மூலம் பாலாபிஷேகம் செய்யப்பட்டது.
காஞ்சிபுரம்: 21 அடி உயர சிவபெருமான் சிலைக்கு டிரோன் மூலம் பாலாபிஷேகம்
Published on

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் தான்தோன்றீஸ்வரர் கோவில் முகப்பில் உள்ள 21 அடி உயர சிவபெருமான் சிலைக்கு டிரோன் மூலம் பாலாபிஷேகம் செய்யப்பட்டது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, சிவபெருமான் திருவுருவ சிலைக்கு வண்ணம் பூசி புதுப்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து டிரோன் கருவி மூலம் சிவபெருமானுக்கு 21 லிட்டர் பாலை ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com